தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக சுமார் ₹180 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாகவும், இதனை ஒரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனம் மூலமாக அவர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்து, ரகசியமாக இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசியதாக இதுவரை 8 பேர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சதியின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்துடனான தொடர்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், தமிழக அரசியல் களம் தற்போது பெரும் கொந்தளிப்பான சூழலைச் சந்தித்துள்ளது.
