மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த பிக்பாஸ் புகழ் ஜூலி, தற்போது மிக மோசமான குற்றச்சாட்டொன்றில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சட்டவிரோத சிறுநீரக (கிட்னி) திருட்டு கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் அவர் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கூறிய ஜல்லிக்கட்டு கதையை விமர்சித்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் சிலர் இதைக் கிளப்பி வருவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆயினும், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோவில், ஜூலி மற்றும் அவரது கணவர் ஆகியோர் இணைந்து சிறுநீரகத் திருட்டில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கும்பல், சிறுநீரகம் தேவைப்படுபவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, சிறுநீரகம் தானம் செய்பவர்களுக்கு முறையான பணத்தைச் செலுத்தாமல் மோசடி செய்வதாகவும், இதில் ஜூலிக்கும் அவரது தோழிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேடு குறித்து ஆதாரங்களை வெளியிட்ட பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜூலி தொலைபேசி வாயிலாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. “யார் எதைக் கேட்டாலும் தெரியாது என்று சொல்லிவிடு” என அவர் எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள சிலருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஜூலி இந்தச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலமுறை விமர்சனங்களுக்கு உள்ளான ஜூலி, தற்போது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருப்பது அவரது திரையுலகப் பயணத்தை மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஜூலி தரப்பிலிருந்து இதுவரை முறையான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. காவல்துறையினர் தலையிட்டு விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த ‘கிட்னி திருட்டு’ புகாரில் உள்ள உண்மைத்தன்மை வெளிச்சத்திற்கு வரும்.
View this post on Instagram
