3-வது முறை கற்பமாகவுள்ளாரா நடிகை ஜெனிலியா?… நச்சுன்னு பதிலளித்த கணவர் ரிதேஷ் தேஷ்முக்…

By Begam

Published on:

இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

   

திருமணத்தை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டுவிலகி  குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்தார் நடிகை ஜெனிலியா. தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜெனிலியா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில் ஜெனிலியாவின் கணவர், ரித்தேஷ் தேஷ்முக், இந்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதிக குழந்தைகளைப் பெறுவதைப் பொருட்படுத்தவில்லை என்றாலும், இந்த வதந்திகள் தவறானவை என்றும் “இன்னும் 2-3 வைத்திருப்பதை நான் பொருட்படுத்த மாட்டேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பொய்யானது” என்று கூறியுள்ளார்.