ஒரு படத்தின் தலைப்பை பார்த்ததும் பதறிய மக்கள்.. உடனே மாற்ற குவிந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள்.. அப்படி என்னப்பா அந்த டைட்டிலில் இருந்துச்சு..!

Spread the love

பொதுவாகவே சினிமாவின் பின்னணியை புரட்டிப் பார்த்தால் இன்றைய காலத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வியக்கும் அளவிற்கு பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அப்படித்தான் ஒரு படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்துள்ளது. அந்த காலத்தில் திகில் மற்றும் தெள்ளார் திரைப்படங்களை தந்து கொண்டிருந்த வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் கைதி. கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவருடன் எஸ் ஏ நடராஜன், ரேவதி மற்றும் மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அமெரிக்க படமான டார்க் பேசஸ் என்ற படத்தின் கதையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் நாயகன், சிறையிலிருந்து தப்பித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதையாகும். இந்தப் படத்தை ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு ரத்தம். இதனால் ஜூப்பிட்டர் பிலிம்ஸ் இன் ரத்தம் விரைவில் வருகிறது என்ற வாக்கியத்துடன் பத்திரிகைகளில் செய்தி வெளியாக போஸ்டர்கள் மற்றும் சுவர்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் குழப்பம் அடைந்தனர். ரத்தம் விரைவில் வருகிறது என்று ஒரு தலைப்பா என்று இது குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதி தலைப்பை மாற்ற வேண்டுமென நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்துள்ளது. மக்கள் தலைப்பை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள் என்பதை அறிந்த அந்த தயாரிப்பு நிறுவனம் படத்தின் தலைப்பை கைதி என்று மாற்றி அமைத்தது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago