குட் நியூஸ்..! அரசுப் பேருந்துகளில் இனி ஆபத்து கிடையாது… தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

தமிழக அரசுப் போக்குவரத்துத் கழகப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்ய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விரைவில் ஜிபிஎஸ் (GPS) கருவிகள் மற்றும் அவசரகால அழைப்பு பொத்தான்கள் (Panic Buttons) பொருத்தப்பட உள்ளன. பேருந்து பயணத்தின்போது ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களோ ஏற்பட்டால், பயணிகள் இந்த அவசரகால பொத்தானை அழுத்துவதன் மூலம் உடனடியாகத் தங்களுக்குத் தேவையான உதவியைப் பெற முடியும்.

இந்தத் தொழில்நுட்பமானது, பொத்தான் அழுத்தப்பட்டவுடன் அந்தப் பேருந்து இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் கண்டறிந்து, அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தானாகவே தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கள் அல்லது அவசர மருத்துவத் தேவைகளின்போது மீட்புப் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொள்ள முடியும். பயணிகளின், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த முயற்சி ஒரு மைல்கல்லாக அமையும் எனப் போக்குவரத்துத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.