சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீசார் அளித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா. இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளது அதாவது நிகிதா போலீசில் தெரிவித்தது போல டாக்டர் கிடையாது. Phd முடித்துவிட்டு அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனக்கு முக்கிய பிரமுகர் உதவியாளரை தெரியும் என்றும் அவர் மூலமாக அரசு வாங்கிக் கொடுப்பதாகவும் 2010 ஆம் வருடம் கூறியிருக்கிறார். இதை நம்பி சிலர் அவர்கள் அரசு வேலை ஆசையில் 16 லட்சம் ரூபாய் வரை இவரிடம் கொடுத்ததாகவும் வேலை வாங்கி கொடுக்காத நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது சம்பந்தப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் புகார் இருக்கிறது.
இதே போல அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி கொடுப்பதாகவும் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது . நிகிதா டாக்டர் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் Phd படித்தவர் என்கிறார்கள். திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமங்கலத்தில் அவருடைய வீடு பூட்டி கிடக்கிறது. இவரும், தாயாரும் எங்கு சென்றார்கள்? என்பது தங்களுக்கு தெரியாது என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…