லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் CM ஸ்டாலின், மூன்று நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்டாலின் ஹாஸ்பிடலில் இருந்தபடியே அரசு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போலோ ஹாஸ்பிடலில் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , முதல்வர் ஸ்டாலின் அண்ணன் மு.க.முத்துவின் மறைவு அன்று, நாள் முழுவதும் உணவு சாப்பிடாமல், நின்றவாரே இருந்ததால் தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
