“அய்யோ அம்மா ரொம்ப வலிக்குது”…. 3 வயது பிஞ்சு குழந்தையை தாய் கண்முன்னே… மாற்றான் தந்தை செய்த உச்சக்கட்ட கொடூரம்…!

Spread the love

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் நிகழ்ந்த இந்தச் சோகமான சம்பவம், சமூக வலைதளங்களிலும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரண்டஅள்ளியைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் எழிலரசி தம்பதியினருக்கு மூன்று வயதில் சிவதர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சிவசங்கர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், எழிலரசிக்கு பாலகோடு பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதுடன், கணவன் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தன் மனைவியின் தவறான உறவைக் கண்டித்த சிவசங்கரிடம் கோபித்துக்கொண்டு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எழிலரசி தன் மூன்று வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். தருமபுரி எஸ்.வி. சாலையில் ஐயப்பனுடன் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்-மனைவி போல வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், மதுபோதையில் வீட்டிற்கு வரும் ஐயப்பன், பிஞ்சு என்றும் பாராமல் சிறுமி சிவதர்ஷிகாவின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்துத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

தொடர்ச்சியான இந்தச் சித்திரவதையால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எழிலரசி, குழந்தையை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவலை அறிந்த குழந்தையின் தந்தை சிவசங்கர், பதறியடித்து மருத்துவமனைக்கு வந்ததோடு, இக்கொடூரச் செயல் குறித்து தருமபுரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தையின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், எழிலரசி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஐயப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எழிலரசி சேலம் மத்திய சிறையிலும், ஐயப்பன் தருமபுரி சிறையிலும் அடைக்கப்பட்டனர். தாயின் கள்ளக்காதலால் பச்சிளம் குழந்தை சித்திரவதைக்கு உள்ளான இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

9 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

16 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

20 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

25 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

57 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

1 மணத்தியாலம் ago