“ஆசையாக பேசிய தம்பதி…” PRO-வை நம்பி ரூ.74 லட்சத்தை கொடுத்து ஏமார்ந்த நபர்கள்… பரபரப்பு பின்னணி…!!

Spread the love

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 74 லட்சம் மோசடி செய்துள்ளனர். உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என ஆசைவார்த்தை கூறி, சாந்தி என்பவரது மகனுக்கு வேலை வாங்கித் தர ரூ. 50 லட்சம் வாங்கியுள்ளனர். இதேபோல் மேலும் நான்கு நபர்களிடம் தலா ரூ. 4 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.

பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்ட சாந்தி, தேனி மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தேனி குற்றப்பிரிவு போலீசார் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அந்தத் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சேலம் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் சண்முகசுந்தரமும் அவரது மனைவியும் தலைமறைவாக உள்ளதால், அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

3 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

3 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

4 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

4 மணத்தியாலங்கள் ago