ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றதில், இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்திய அணியினரும் தங்களது மகிழ்ச்சியை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஜிதேஷ் ஷர்மா ஆகிய மூவரும் சேர்ந்து, பாக்., பவுலர் அப்ரர் அகமதுவின் டிரேட்மார்க் மொமன்ட்டை செய்து கலாய்த்துள்ளார்கள். இதுதொடர்பான வீடியோ வைரலாகிய நிலையில் ‘தரமான செய்கை’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
This Is Next Level Trolling!
Jitesh, Arshdeep and Harshit Trolls Pakistani Abrar 🤣 #AsiaCupFinal pic.twitter.com/S0YlZekSSe
— Apurva Singh (@iSinghApurva) September 28, 2025
துபாயில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
