மும்பையில் தரையிறங்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், விமான நிலையத்திலிருந்து வெறும் 400 மீட்டர் தொலைவில் உள்ள ஹில்டன் (Hilton) ஹோட்டலுக்குச் செல்ல டாக்ஸி ஓட்டுநரிடம் ₹18,000 கொடுத்து ஏமாற்றப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார். நேரடியாகச் செல்லாமல், ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபர் அப்பெண்ணைத் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று அச்சுறுத்திய பின் ஹோட்டலில் இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த விவரங்கள் X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை அந்தப் பெண்ணிடம் விவரங்களைக் கேட்டுப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
