இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா ஏ போட்டிக்கு முன்னதாக, இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பொதுவாக இலங்கையின் ஆடுகளங்கள் சற்று மெதுவாக இருக்கும் என்பதால், சூர்யவன்ஷியிடம் தற்காப்பு ஆட்டத்தை பயிற்சி செய்யுமாறும், நிதானமாக விளையாடி ஆடுகளத்தில் நேரத்தை செலவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
அதன்படி, பயிற்சியின் தொடக்கத்தில் தான் எதிர்கொண்ட முதல் சில பந்துகளை சூர்யவன்ஷி மிகவும் கவனமாக கையாண்டார். பந்துகளை தடுத்து ஆடி , வரவிருக்கும் முக்கிய போட்டிக்கு முன்னதாக தனது தற்காப்பு ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். ஆனால், அவரது இந்த நிதானமான அணுகுமுறை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
அடுத்த சில பந்துகளிலேயே அவரது இயல்பான ஆக்ரோஷமான ஆட்டத்திறன் வெளிப்படத் தொடங்கியது. தற்காப்பு ஆட்டத்தைக் கைவிட்ட சூர்யவன்ஷி, பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கத் தொடங்கினார். வலைப்பயிற்சியின் இறுதிக்குள் ஒவ்வொரு பந்திலும் பெரிய ஷாட்களை அடிக்க முயன்று, பயிற்சியை தனது அசாத்திய அதிரடி ஆட்டமாக மாற்றினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…