பாகிஸ்தானுடன் 1965 மற்றும் 1971 போர்களில் பங்கேற்ற இந்திய விமானப்படையின் அலங்கரிக்கப்பட்ட போர் விமானியான குரூப் கேப்டன் பருல்கர்(82) ஞாயிற்றுக்கிழமை புனேவில் காலமானார். நேற்று முன்தினம் காலை புனேவில் உள்ள தனது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ராஜ்லட்சுமி என்ற மனைவியும், ஆதித்யா மற்றும் சச்சின் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
1965 ஆம் வருடம் இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, இவருடைய விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. அப்போது விமானத்தை விட்டுவிட்டு அங்கிருந்து உடனே புறப்படுமாறு உயர் அதிகாரிகள் வறுபுறுத்திய நிலையில், விமானத்துடன் நாட்டிற்கு வந்த வீரர் இவரே.
