சுதந்திர தினத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகள் வசதி வசதிக்காக, நான்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னனை சென்ட்ரல் -போத்தனூர்
வருகிற 14-ஆம் தேதி, இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்த புறப்படும் ரயில்(06027) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். பின் 17ஆம் தேதி, இரவு 11:30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில்(06028) மறுநாள் காலை 8:20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது.
மங்களூர்-திருவனந்தபுரம்
வருகிற 14, 16ஆம் தேதிகளில், மாலை 7.30 மணிக்கு மங்களூரில் இருந்த புறப்படும் சிறப்பு ரயில் (06041) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடைகிறது.பின் 15, 17 ஆம் ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06042) மறுநாள் காலை6.30 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது.
நாகர்கோவில் -தாம்பரம்
வரும் 17ஆம் தேதி, இரவு 11 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் (06012) மறுநாள் காலை 10:55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.பின் 18 ஆம் தேதி, மதியம் 3.30 மணி அளவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06011) மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
சென்னை எழும்பூர் -செங்கோட்டை
வருகிற 14-ஆம் தேதி, இரவு 9:55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06089) மறுநாள் காலை 11 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. பின் 17ஆம் தேதி இரவு 7:45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (8.8.2025) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இச் சிறப்பு ரயில்களை பயன்படுத்தி, கூட்ட நெரிசலை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
