மக்கள் அன்றாடம் பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தவும் மாதாமாதம் தங்களது EB மற்ற சேவை கட்டணங்கள் என அனைத்தையும் செலுத்துவதற்கு முக்கியமாக Google pay-யை பயன்படுத்துகிறார்கள். இந்த Google pay மூலமாக கரண்ட் பில் OTT தளங்கள் சேவை கட்டணங்கள் மொபைல் ரீசார்ஜ் போன்ற பல பில்களை எளிதாக நம்மால் கட்ட முடியும்.
ஆனால் இந்த பில்களை எல்லாம் நாம் ஒவ்வொரு மாதமும் கட்டுவது ஒரு சிலருக்கு பிஸியான ஷெடியுலில் கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு திரும்பத் திரும்ப ஒரே வேலையை செய்யாமல் அந்த வேலையை எளிதாக்க google pay தானாகவே அந்த வேலை செய்து கொள்வதற்கான ஒரு புதிய அம்சம் இருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.
Google pay-யில் அமைந்திருக்கும் AutoPay அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்து விட்டால் ஒவ்வொரு மாதமும் நீங்கள் பில் கட்ட வேண்டிய தேவை இல்லை. Google pay அதுவாகவே பரிவர்த்தனைகளை ஆட்டோமேட்டிக்காக செய்து விடும். நீங்கள் எதற்கெல்லாம் மாதாமாதம் பணம் செலுத்த வேண்டி இருக்கிறதோ அந்த தரவுகளை AutoPay அம்சத்திற்குள் சேமித்து வைப்பதன் மூலம் ஆட்டோமேட்டிக்காக இந்த பரிவர்த்தனைகள் நடந்து விடுவதால் நீங்கள் டென்ஷன் இல்லாமல் கூலாக இருக்கலாம்.
நீங்கள் எப்போதாவது இந்த ஆட்டோமேட்டிக் பரிவர்த்தனை வேண்டாம் என்று நினைத்தால் கூட ஆப்பில் சென்று AutoPay ஆப்ஷனுக்குள் சென்று எதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ அதெல்லாம் நீக்கிக் கொள்ளலாம். இது பல பிசியான வேலையில் இருப்பவர்கள் தான் கட்ட வேண்டிய கட்டணங்களை மறந்து விடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…