BIG ALERT: இவர்கள் ஓட்டு போட முடியாது… தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு..!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பல இடங்களிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில்  வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது என்ற தகவலை ECI விளக்கியுள்ளது. அதன்படி டிச.4-ம் தேதிக்குள் SIR விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்காத நபர்களின் பெயரும், மூன்றி முறை வீட்டுக்கு சென்றும் படிவத்தை கொடுக்காதவர்கள் பெயரும் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்துள்ளது. அவர்கள் டிச.9 முதல் ஜன.8 வரை விண்ணப்பம்  6 உடன் உறுதிமொழிப் படிவத்தை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம். அந்த  வாய்ப்பையும் தவறவிட்டால் ஓட்டு போட முடியாது.