இரவோடு இரவாக கட்சியிலிருந்து நீக்கம்… அடுத்தடுத்து அதிரடி காட்டும் இபிஎஸ்..!

By Nanthini on ஆனி 30, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சியை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் அவர்களுடைய ஆட்சி காலம் முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டன. அதன்படி இந்த முறை அதிமுக கட்டாயம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். இப்படியான நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கட்சிக்குள் களை எடுக்கும் வேலையை இபிஎஸ் தொடங்கியுள்ளார்.

அதன்படி அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் தர்வேஷ், பாண்டியன் ஆகியோரை கட்சி பதவியிலிருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். திருவாடனை ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், இளங்கோவன், பரமக்குடி நகர செயலாளர் ஜமால் ஆகியோரையும் பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.