கள்ளத்தொடர்பை நிறுத்திய காதலி.. ஆத்திரத்தில் மார்பில் 9 முறை கத்தியால் குத்தியே கொன்ற கள்ளக்காதலன்…!

By Srimathi on ஆவணி 17, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சிவானந்த, மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன.

ரேஷ்மாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில், சிவானந்த் தனது மனைவியை கண்டித்துள்ளார். ரேஷ்மா தனது கள்ளத்தொடர்பை நிறுத்திய நிலையில், ஆத்திரமான ஆனந்தராஜ், நேற்று முன்தினம் ரேஷ்மாவை வீடு புகுந்து குத்தி கொலை செய்துள்ளார்.

   

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆனந்தராஜை கைது செய்து, ரேஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் ரேஷ்மாவின் வயிறு, மார்பில் 9 முறை கத்தியால் குத்தி இருந்தது தெரியவந்தது.