“மகன் வயது சிறுவனுடன் உல்லாசம்”… மிளகாய் பொடியுடன் வீட்டுக்குள் புகுந்து… ஆந்திராவையே உலுக்கிய ‘ஆண்டி’யின் கொடூர ஸ்கெட்ச்….!

By Nanthini on மாசி 9, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் சித்தூரில் அரங்கேறியுள்ள ஒரு திடுக்கிடும் கொலை முயற்சி சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரகசியமாக நீடித்த இந்த விவகாரம் கவிதாவின் கணவர் விஜய்க்கு தெரியவந்ததால், அவர் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் மாமியாரை ஒழித்துக்கட்ட கவிதா ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார். இதற்காக அவர் தனது 17 வயது காதலனுடன் கைகோர்த்தார். சம்பவத்தன்று கவிதாவின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தச் சிறுவன், கத்தி மற்றும் மிளகாய்பொடியுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளான்.

   

வீட்டில் தனியாக இருந்த கவிதாவின் மாமியார் நிர்மலாவின் கண்ணில் மிளகாய்பொடியைத் தூவி, அவர் நிலைகுலைந்த தருணத்தில் சிறுவன் அவரது கழுத்தை அறுக்க முயன்றுள்ளான். வலியால் நிர்மலா எழுப்பிய மரண ஓலத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, பிடிபடுவோம் என்று அஞ்சிய அந்தச் சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான். கழுத்தில் பலத்த காயமடைந்த நிர்மலா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் தப்பினார்.

   

பாதிக்கப்பட்ட நிர்மலா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனைப் பிடித்துச் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்து தனது குடும்பத்தையே அழிக்கத் துணிந்த கவிதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளையும், குடும்பத்தையும் மறந்து ஒரு பெண் செய்த இந்தச் செயல் ஆந்திர மாநிலத்தையே உலுக்கியுள்ளது.