தற்பெருமையை பதிவின் மூலம் சொன்ன இளையராஜா.. ஆனா அதுக்கு வச்சாரே ஒரு தலைப்பு… அது தான் ஹைலைட்..!

By Soundarya on கார்த்திகை 17, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் 48 வருடங்களுக்கு மேலாக சிறந்த இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. இந்திய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் உலக அளவில் 20,000 மேற்பட்ட இசைக்கச்சேரிகளை அவர் நடத்தியுள்ளார். மறைந்த இசை மேதை எம்எஸ் விஸ்வநாதனுக்கு அடுத்தபடியாக தமிழ் திரை உலகில் என்றளவும் மிகப்பெரிய புகழோடும் திறமையோடும் வலம் வந்து கொண்டிருக்கும் இளையராஜாவை இசையில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

இரண்டு மணி நேரத்தில் 7 பாடல்கள் இசையமைத்த இளையராஜா.. மொத்த பாடலும் சூப்பர் ஹிட் ஆன படம் - Cinemapettai

   

இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடலை அமைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலையில் 1980 களின் தொடக்கத்தில் இளையராஜா மிக மிக பிஸியான இசையமைப்பாளராக இருந்து வந்த சமயத்தில் ஒரே நாளில் பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். அதாவது ஒரு நாள் காலை 6 மணி முதல் 9 மணி வரை வெறும் 3 மணி நேரத்தில் மூன்று வெவ்வேறு திரைப்படங்களுக்கு மொத்தம் 21 பாடல்களுக்கான டியூனை அமைத்து மூன்று இயக்குனர்களையும் இளையராஜா மிரட்டினார்.

   

இளையராஜாவின் பாடல்கள் யாருக்கு சொந்தம்? சட்டம் சொல்வது என்ன? - BBC News தமிழ்

 

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரிகளை நடத்தி வரும் இவர் தற்போது தனக்கான ட்ரம்பட்டை தானே வாசித்துக் கொள்கிறேன் என்றும் ஆனாலும் அது சுகமான ஒரு அனுபவம் தான் என்றும் பதிவிட்டுள்ளார். தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்றும் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று இளையராஜா பதிவிட்டுள்ளார்.

preview

மேலும் அதில்  நூறு வருட இந்திய சினிமாவில் சொந்தமாக இசையை எழுத்து வடிவில் எழுதக்கூடிய ஒரே இசைக்கலைஞன் இசைஞானி இளையராஜா மட்டும் தான் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது என்று தன்னைப் பற்றிய குறிப்பை தன்னுடைய பக்கத்தில் இளையராஜா பதிவிட்டுள்ளார். இதனைய டுத்து இனையவாசிகள் பலரும் இசைக்கு எழுத்து இருக்கிறது என்பது இன்று தான் எங்களுக்கே தெரியும் சார் என்று பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.