Categories: சினிமா

ஆளும், மூஞ்சியும் பாரு.. ராஜ்கிரணை அசிங்கப்படுத்திய இளையராஜா.. நினைத்துக்கூட பாக்கமுடியாத அளவுக்கு சம்பவம் செய்த ராஜ்கிரண்..

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். என் ராசாவின் மனசிலே படத்தில், மாயாண்டி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். முரட்டுத்தனமான அவருக்குள், மீனா கொண்டிருக்கும் காதல், மயிலிறகால் வருடியதை போன்ற மென்மையான உணர்வாக அவருக்கும் வெளிப்படும். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளரும் ராஜ்கிரண்தான். ஆனால் இளையராஜா இசை வேண்டும் என்று கேட்டுச் சென்றவரை அவரை இளையராஜா முதலில் ஏற்றுகொள்ளவில்லை. அவரை சந்திக்கவே தவிர்த்தார்.

நீ ஒரு தடவை சொன்னால் கேட்க மாட்டியா, நீ எல்லாம் நடிக்க வந்துட்டே, கண்ணாடியில் உன் முகத்தை பார்த்தியா, நீ ஒரு ஹீரோவா, ஆளும் மூஞ்சியும் என திட்டி அனுப்பியிருக்கிறார். நான் படம் எடுத்துட்டு வந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கணும் என ராஜ்கிரண் சொல்ல, உன் படத்தை எல்லாம் பார்க்கறதுக்கு எனக்கு நேரமில்லை, எனக்கு வேற வேலையில்லையா என்று திட்டியிருக்கிறார்.

அப்போது இளையராஜாவுடன் இருந்த வாலி, அப்படி என்னதான் படம் பார்ப்போம் என, இளையராஜாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று, இருவரும் படத்தை பார்க்கின்றனர். படம் பார்த்த பிறகு, இளையராஜா எதுவுமே சொன்னதில்லை. காலையில் 7 மணிக்கு என்னை பார்க்க வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

ராஜ்கிரண் இரவு முழுவதும் தூக்கமின்றி தவிக்கிறார். காலையில் இளையராஜா என்ன சொல்லப் போகிறார் என்ற குழப்பத்தில், இருக்கிறார். மறுபடி திட்டுவாரோ என பயப்படுகிறார். மறுநாள் காலை இளையராஜாவை பார்க்க சென்ற போது, இளையராஜா பூஜை அறையில் இருக்கிறார். நல்ல சகுனம் என்று ராஜ்கிரண் நினைக்கிறார். அப்போது இந்த படத்துக்கு என்ன செலவாச்சு, என்று கேட்கிறார். அப்போது ரூ. 25 லட்சம் வரை இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கிரண் சொல்கிறார்.

உடனே ரூ. 25 லட்சத்துக்கான செக்கை தந்த இளையராஜா மீதி படத்தை முடிச்சு கொடுத்துடு, மீதி 75 லட்சம் ரூபாய் தந்துடறேன், இந்த படத்தை எனக்கே கொடுத்துரு. நான் பாவலர் கிரியேசன்ஸ் என்ற பெயரில் இந்த படத்தை நானே ரிலீஸ் பண்ணிக்கிறேன், என்று கூறியிருக்கிறார். ராஜ்கிரணை கண்டபடி திட்டிய இளையராஜா, அவரது என் ராசாவின் மனசிலே படத்தை பார்த்து அசந்து போய், அந்த படத்தை அவரே ராஜ்கிரணிடமிருந்து பாவலர் கிரியேசன்ஸ் மூலம் வெளியிட்டு இருக்கிறார். படம் பிளாக் பஸ்டர் மூவியாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

admin

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago