தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தன்னுடைய குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் கே.ஜே ஏசுதாஸ். இவர் குரலில் வழிந்தோடும் சோகத்தின் இனிமை, அமைதியின் அதிசயம் பலரையும் ஈர்ப்பவை. இசைஞானி இளையராஜா இசையில் கே.ஜே ஏசுதாஸ் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். பல பாடல்கள் காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடல்கள். அப்படி இளையராஜா – கே.ஜே ஏசுதாஸ் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது இளையராஜா ஒரு பாடல் பதிவிற்காக பாடகர் கே.ஜே ஏசுதாஸின் வருகைக்காக காத்திருந்துள்ளார். ஆனால் ஏசுதாஸ் வருவதற்கு தாமதமானதனால் அந்த பாட்டை இளையராஜா சும்மா ஒருமுறை பாடி பதிவு செய்துள்ளார்.
அதன் பிறகு ஏசுதாஸ் வந்ததால் அவரை பாட வைத்துள்ளா.ர் ஏசுதாஸ் வந்து பாடல் பதிவுக்கு முன்பாக இசைஞானி இளையராஜா அந்த பாடலை இப்படித்தான் பாட வேண்டும் என்று கூறியுள்ளார். தான் பாடியதையும் போட்டு காட்டியுள்ளார். அந்த பாடலைக் கேட்ட கே.ஜே ஏசுதாஸ் வியந்து போய் நீங்கள் பாடியதே நன்றாக இருக்கிறது. இதற்கு மேல் நன்றாக என்னால் பாட முடியாது. நீங்கள் பாடியது அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அப்படி என்ன பாடல் இளையராஜா பாடினார் என்றால் தாய் மூகாம்பிகை படத்தில் இடம்பெற்ற “ஜனனி ஜனனி ஜகம் நீ” என்ற பாடல் தான். இந்த பாடலை கேட்கும் எவரும் இளையராஜாவின் குரலில் இருக்கும் ஆன்மீகம் பக்தி நிலையை உணர முடியும்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…