Categories: TRENDING

இயக்குனரிடம், இந்த எடத்துல ஒரு பாட்டு ஒன்னு கம்போஸ் பண்ணி தரேன் போடுன்னு சொன்ன இளையராஜா.. செம்ம ஹிட்டான ரஜினியின் அந்த பாட்டு..

சில சமயங்களில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக அப்ப படத்தினுடைய கதை, கதாபாத்திரங்களின் தேர்வு, திரைக்கதை வசனம், பாடல்கள் ஒளிப்பதிவு என பல விஷயங்களும் அப்படத்தை வெற்றி படமாக மாற்றுகின்றன. இதில் ஏதாவது ஒன்று சரிவை சந்தித்தாலும் கூட அப்படம் முழுவதுமே சரிவை சந்திக்க நேரிடும். அது மட்டுமல்லாமல் ஒரு படம் என்பது பலரின் கூட்டு முயற்சியாக தான் உருவாக்கும்.

#image_title

ஒரு சில இயக்குனர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என தன்னுடைய கதையை மட்டுமே ஒளிப்பதிவு செய்து அதை படமாக வெளியிடுவர். ஒரு சில இயக்குனர்கள் பிற தொழில்நுட்ப கலைஞர்களும் கூறக்கூடிய சிறு சிறு திருத்தங்களை தனது படத்தில் திருத்திக் கொண்டு அதன் பிறகு ஒளிப்பதிவு செய்து அதை வெளியிடுவர். ஒரு சில நேரத்தில் இவை அப்பிடத்திற்கு பெரிதும் கை கொடுப்பதாக இருக்கும். அந்த வகையில் தான் ரஜினிகாந்தினுடைய படிக்காதவன் படத்தில் இளையராஜா கொடுத்த ஒரு சின்ன அட்வைஸ் அப்படத்தையே வேறு தளத்திற்கு எடுத்து சென்றது என கூறலாம்.

1985 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அம்பிகா சிவாஜி உட்பட பலர் நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் படிக்காதவன். வக்கீலான சிவாஜி தன் இரண்டு தம்பிகள் மீது உயிரையே வைத்திருப்பார் சிவாஜியின் தோற்றத்திற்கும் சிறுவர்களுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் இரண்டாம் தாரத்தின் பிள்ளைகள் என்பது போல ஒரு பாயிண்டை சாமர்த்தியமாக இணைத்து இருப்பார்கள். சமையல் உள்ளிட்ட விஷயங்கள் சிரமமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வார் சிவாஜி. ஆனால் வந்த அந்நியோ இரண்டு தம்பிகளையும் கடுமையாக திட்டி வீட்டை விட்டு துரத்திவிடுவார்.

#image_title

பிரிந்த சகோதரர்கள் கடைசியில் இணைந்தார்களா? என்பது தான் படிக்காதவன் படத்தின் கதை. இளையராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் அனைத்தும் பாட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. குறிப்பாக ’ஊர தெரிஞ்சுகிட்டேன்’ என்ற பாடல் இன்றைய வரைக்கும் துரோகத்தால் வீழ்ந்தவர்களுக்கு ஒரு ஃபேவரிட் பாடலாக இப்பாடல் இருக்கும். இப்பாடல் இப்படத்தில் இடம்பெறுவதற்கு ஒரு சுவாரசியமான நிகழ்வை நினைவு கூறலாம்.

#image_title

அதாவது இப்படத்தை முழுமையாக முடித்துவிட்டு இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இளையராஜா அவருக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார். இப்படத்தை பார்த்த இளையராஜா இந்த இடத்தில் ஒரு பாடல் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என கூறியிருக்கிறார். அந்தக் காலத்தில் இளையராஜாவின் சொல்லை தட்டுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை. தயாராப்பாளர்கள் கியூ வில் நின்று அவரிடம் கால்ஷீட் வாங்கிய காலம் அது.

#image_title

மறுநாள் இளையராஜா தன்னுடைய ஸ்டுடியோவிற்கு சென்று மதியத்திற்குள் ஒரு பாட்டை தயார் செய்து அதை அப்படத்தில் இணைக்க கூறியிருக்கிறார். அவசர அவசரமாக அன்று இரவே செட்டு போட்டு இந்த பாடலுக்கான காட்சிகளையும் எடுத்திருக்கின்றனர். பிறகு படம் திரையிட்ட பிறகு இளையராஜாவால் இணைக்கப்பட்ட அந்த பாடல் மிகப்பெரிய பலத்தை இப்படத்திற்கு கொடுத்தது என்னலாம். அந்த பாடல் தான் ’ஊர தெரிஞ்சுகிட்டேன்’ பாடல்.

Archana
Archana

Recent Posts

அஜித் கொஞ்சம் கூட யோசிக்காம அதை பண்ணாரு.. நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த நடராஜன்..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

42 seconds ago

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

19 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago