Categories: சினிமா

இளையராஜா செய்த மேஜிக்… விஜயகாந்த் பட பாடலை தேடி வந்து ரசித்த யானை…

Spread the love

விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயரை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இது தவிர தமிழக மக்களுக்காக அரசியல் கட்சியை நிறுவி அரசியல்வாதியாகவும் இருந்தவர். ‘கருப்புத் தங்கம்’, அள்ளி கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரரான விஜயகாந்த் ‘கருணை வள்ளல்’ எனவும் அன்போடு மக்களால் அழைக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜயகாந்த். ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ஆனஸ்ட்ராஜ்’ போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்ததால் இவரை கேப்டன் விஜயகாந்த் என்றும் அழைப்பர். விஜயகாந்த் தமிழ்நாட்டின் உயரிய சிவிலியன் கலைமாமணி விருது, இந்தியாவின் மூன்றாவது உயந்த விருதான பத்மபூஷன் விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘வைதேகி காத்திருந்தாள்’. இப்படத்தில் விஜயகாந்த் உடன் ரேவதி, சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். ஆர் சுந்தர்ராஜன் இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. விஜயகாந்தின் கேரியரில் ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் தெலுங்கில் ‘மான்சி மனசலோ நெஞ்சம்’, கன்னடத்தில் ‘ப்ரீத்தி நீ இல்லடே நா ஹேகிரஅலி’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது.குறிப்பாக ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி பிரபலமானது. இப்பாடலுக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் உள்ளது.

இசை உலகின் சக்கரவர்த்தி என்றால் அது இசைஞானி இளையராஜா தான். சிறியவர் முதல் பெரியவர் வரை அவரின் பாடல்களை ரசிப்பவர்கள் ஏராளம். தனது இசையின் மூலம் நம் மனதை கரைந்து போக செய்து விடுவார் இளையராஜா. இந்த வரிசையில் மிருகங்களும் சேர்ந்து கொண்டது வைதேகி காத்திருந்தாள் படம் வெளியான போது நிரூபணம் ஆகியுள்ளது. சிலருக்கு சொல்லி அழுவதற்கு முடியாத சோகங்கள் மனதிற்குள் இருக்கலாம் அதை தேற்றிக் கொள்ள பாடல்கள் மூலம் ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள்.

அதேபோல் தேனி கம்பம் ஆகிய பகுதிகளில் வைதேகி காத்திருந்தாள் படம் ஓடும்போது வெளியே ஸ்பீக்கரில் ராசாத்தி உன்ன பாடல் கேட்கும் பொழுது அங்கு பக்கத்தில் காட்டு பகுதியில் உள்ள ஒரு யானை ஊருக்குள் வந்து அந்த பாடலை நின்று கேட்டுவிட்டு செல்லுமாம். இந்த திரைப்படம் எத்தனை நாள் ஓடியதோ அத்தனை நாட்களும் அந்த பாடல் இசை கேட்டவுடன் அந்த யானை ஓடிவந்து நின்று \இளையராஜா அவர்களின் பாடலை ரசித்து கேட்குமாம். என்று அந்த படம் நிறுத்தப்பட்டதோ அன்று முதல் யானை வருவதில்லையாம். அதற்கு காரணம் என்னவென்றால் அந்த யானையின் குட்டி படம் வருவதற்கு சிறிது காலம் முன்னால் இறந்து விட்டதாம். அந்த சோகத்தை சொல்ல முடியாத அந்த வாயில்லா ஜீவன் இளையராஜா அவர்களின் அந்த பாடலை கேட்டு ஆறுதல் தேடிக் கொண்டிருக்கிறது என்பது பின்னாளில் தெரிய வந்ததாக இளையராஜா அவர்களே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

3 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

4 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

4 மணத்தியாலங்கள் ago