மறைந்த திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி, இவருடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு மிகுந்த வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் பவதாரணியுடன் இறுதியாக எடுத்த புகைப்படங்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளான திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி 5 மாதமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்த நிலையில் ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் இறப்பு இளையராஜா குடும்பத்தினருக்கும்; உறவினர்களுக்கும்; திரை பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
மேலும், இளையராஜாவின் மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரை பிரபலங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இளையராஜாவின் வீட்டிற்கு வந்து தங்கள் இரங்கலை தெரிவித்து வந்துள்ளார்கள். பவத்தரணியின் உடல் அவரது பண்ணை வீட்டில் இளையராஜாவின் தாய், மனைவி பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியாகின.
இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகனான இயக்குனர் வெங்கட் பிரபு தங்கை பவதாரணி உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதில் பவதாரணி உடன் கடைசியாக எடுத்த புகைப்படங்கள் என்று பார்ட்டியில் அவளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்ப்பவர் நெஞ்சங்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…