#image_title
சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். காற்றால் நடந்தேன் என்ற ஒரு புத்தகத்தை எழுதியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.
அதற்கு அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி முதன் முதலாக நாயகனாக நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு வாய்ப்பளித்து நாயகனாக அறிமுகம் செய்து வைத்ததால் சீனு ராமசாமியை விஜய் சேதுபதி எப்போதும் குருவாகவே நினைத்து எல்லா மேடைகளிலும் அவரைப் பற்றி பேசுபவர். அது மட்டும் இல்லாமல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் என்றது.
அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு நீர்ப்பறவை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பற்றி வெற்றி பெற்றது. தொடர்ந்து இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் என மூன்று படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கினார் சீனு ராமசாமி. இது மட்டுமில்லாமல் கண்ணே கலைமானே தற்போது கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் சீனு ராமசாமி.
இவரது திரைப்படங்கள் ஆழமான கருத்துக்களையும் செண்டிமெண்ட்களும் நம் மனதை தாக்கும் வகையிலும் இருக்கும். ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சீனு ராமசாமி சினிமாவில் மாற்றம் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் சினிமாவில் மாற்றம் ஏற்பட்டு புதியதாக வேண்டும் என்றால் முதலில் தியேட்டர்களில் இடைவேளை இல்லாமல் செய்ய வேண்டும். இடைவேளை என்ற போர்ஷன் இல்லாமல் படங்களை எடுக்கணும் என்ற நிலை வரும் போது சினிமா கண்டிப்பாக மாறும் என்று கூறியிருக்கிறார் சீனு ராமசாமி.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…