சினிமாவில் மாற்றம் வேண்டுமா…? இதை செய்யுங்க… உண்மையை போட்டுடைத்த இயக்குனர் சீனுராமசாமி…

By admin on புரட்டாதி 13, 2024

Spread the love

சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். காற்றால் நடந்தேன் என்ற ஒரு புத்தகத்தை எழுதியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.

   

அதற்கு அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி முதன் முதலாக நாயகனாக நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு வாய்ப்பளித்து நாயகனாக அறிமுகம் செய்து வைத்ததால் சீனு ராமசாமியை விஜய் சேதுபதி எப்போதும் குருவாகவே நினைத்து எல்லா மேடைகளிலும் அவரைப் பற்றி பேசுபவர். அது மட்டும் இல்லாமல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் என்றது.

   

அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு நீர்ப்பறவை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பற்றி வெற்றி பெற்றது. தொடர்ந்து இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் என மூன்று படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கினார் சீனு ராமசாமி. இது மட்டுமில்லாமல் கண்ணே கலைமானே தற்போது கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் சீனு ராமசாமி.

 

இவரது திரைப்படங்கள் ஆழமான கருத்துக்களையும் செண்டிமெண்ட்களும் நம் மனதை தாக்கும் வகையிலும் இருக்கும். ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சீனு ராமசாமி சினிமாவில் மாற்றம் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் சினிமாவில் மாற்றம் ஏற்பட்டு புதியதாக வேண்டும் என்றால் முதலில் தியேட்டர்களில் இடைவேளை இல்லாமல் செய்ய வேண்டும். இடைவேளை என்ற போர்ஷன் இல்லாமல் படங்களை எடுக்கணும் என்ற நிலை வரும் போது சினிமா கண்டிப்பாக மாறும் என்று கூறியிருக்கிறார் சீனு ராமசாமி.