விஜய்க்கு ஓட்டுபோடாவிட்டால் “சோற்றில் விஷம் வைத்துவிடுவேன்”… பகீர் கிளப்பிய பெண் தொண்டர்..!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

ஈரோட்டில் நடைபெற்ற தவெக பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர், நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு கிடைக்கும் என்றும், மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் அவர் வழங்குவார் என்றும் தனது பலமான நம்பிக்கையைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது குடும்பத்தில் மொத்தம் 9 வாக்காளர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் விஜய்க்கே வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். ஒருவேளை அவர்கள் விஜய்க்குப் போடவில்லை என்றால், அவர்களுக்குத் தெரியாமல் “சோற்றில் விஷம் வைத்துவிடுவேன்” என்று சிரித்தபடியே நகைச்சுவையாகவும், அதே சமயம் தனது அதீத ஆதரவையும் வெளிப்படுத்தினார்.