தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக எச்சரித்துள்ளார். சென்னையில் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முன்பே விஜய் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மோசடி வழிகளில் முதலமைச்சர் பதவியை அடைய அவர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குதிரை பேரம் நடத்தும் நோக்கில் ஆளுநரிடம் போலி ஆவணங்கள் (Forgery) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தினகரன், அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், விஜய் தரப்பு உடனடியாக அசல் ஆதரவுக் கடிதத்தைக் காட்ட வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் விஜய் தனது போலித்தனமான நடவடிக்கைகளை மறைக்கப் பார்க்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.
