தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவர்களுடைய மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
