மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் எங்கும் செல்லப் போவதில்லை என்றும், கடைசி மூச்சு இருக்கும் வரை அதிமுகவின் உண்மையான தொண்டனாகவே நீடிப்பேன் என்றும் திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
தொடர்ந்து தவெக கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், அது “திருமணமான புதுப்பொண்ணு” போன்று ஆரம்பத்தில் பளபளப்பாகவும் அழகாகவும் காட்சியளிப்பதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டதோடு, போகப் போகத்தான் இந்த கட்சியின் நிஜமான செயல்பாடு மற்றும் ஆட்சி எப்படி இருக்கும் என்பது தெரியவரும் என்று விமர்சித்துப் பேசினார்.
