#image_title
நயன்தாரா தனுஷ் இடையேயான காப்பிரைட் விவகாரம் பூதாகரமாகி கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நேற்று நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண டாகுமெண்டரியில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி கேட்கிறார் என்று அறிக்கை வெளியிட்ட பொழுது அனைவரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆனால் போகப் போக தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்பது போல ஒவ்வொருவரும் வெளியே வந்து நயன்தாராவுக்கு எதிராக பேச ஆரம்பித்தார்கள். அதில் முதலாவதாக வெளியே வந்து குரல் கொடுத்தது இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன். இவர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதே பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.
அந்த அறிக்கையில் நீங்கள் இப்போது தனுஷிடம் நியாயம் கேட்கிறீர்களே நயன்தாரா கடந்த வருடம் உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என்னுடைய படத்தின் டைட்டிலை திருடினாரே அதுக்கு நீங்க எங்க பதில் சொல்ல போறீங்க என்று கேட்டிருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் எல் ஐ சி .இது முதலில் எல்ஐசி என்று இருந்தது பிரச்சனைக்கு பிறகு எல்ஐகே என்று மாற்றப்பட்டது. இந்த பெயரை குறிப்பிட்டு தான் எஸ் எஸ் குமரன் அதாவது ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
தற்போது நேற்று இந்த அறிக்கை வெளியான பிறகு அவர் அளித்த பேட்டியில் எல் ஐ சி என்ற ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று அந்த பெயரை நான் தயாரிப்பாளர் கமிட்டியில் நான் ஏற்கனவே 2016 இல் பதிவு செய்து விட்டேன். அப்போது விக்னேஷ் சிவன் இந்த பெயரை வேண்டும் என்று நினைக்கும் போது முதலில் அவரது மேனேஜரை வைத்து என்னிடம் பேசுகிறார் டைட்டில் கொடுக்க முடியுமா என்று கேட்கிறார் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
இதற்கு அடுத்த கட்டமாக மறுநாளே விக்னேஷ் சிவன் என்னை தொடர்பு கொண்டு என்னுடைய டைட்டில் உங்களிடம் எப்படி வந்தது என்று பிளேட்டை மாற்றி பேசி விட்டார். அதற்கு பிறகு ஏகப்பட்ட பிரச்சனை இந்த டைட்டிலால் நடந்தது. வழக்குகள் வக்கீல் என நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். தனுஷ் மாதிரி பெரிய இடம் என்பதால் அவர்கள் இரண்டு வருடம் காத்திருந்து இருந்திருக்கிறார்கள். தனுஷிடம் நியாயம் இருப்பதினால் தானே இரண்டு வருடம் காத்திருந்தார்கள். என்னைப் போல பிரபலம் இல்லாத ஒரு மனிதனை எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பில் என்னுடைய டைட்டிலை திருடி விட்டார்கள் ஒரு மூன்று நொடி விளம்பர படத்தில் நடிப்பதற்கு நீங்கள் காசு வாங்காமல் செய்வீர்களா அதே போல் தான் எல்லோரும் என்று அதிரடியாக பேட்டி அளித்திருக்கிறார் இயக்குனர் எஸ் எஸ் குமரன்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…