மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும் சமூக வலைத்தளம் மூலம் காதலித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கணவர் அடிக்கடி தகராறு செய்து தாக்கியதால், சிவானி ஜான்சியின் சிப்ரி பஜார் பகுதியில் அறை எடுத்துத் தனது தங்கை முஸ் கான் மற்றும் சகோதரர் அனிகேட்டுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் முடிந்து ஜான்சிக்கு வந்த கணவர் யாஷ் தாக்குருக்கும், சிவானிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகில் உள்ள அறையில் தங்கை முஸ்கான் தூங்கச் சென்ற நிலையில், சிவானியும் யாஷும் மற்றொரு அறையில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் யாஷ், சிவானியைக் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு, தங்கை முஸ்கான் தூங்கிக் கொண்டிருந்த அறையையும், சிவானியின் அறையையும் வெளியே பூட்டிவிட்டு யாஷ் தப்பி ஓடியுள்ளார். திங்கள்கிழமை காலை சகோதரர் அனிகேட் வந்து கதவைத் திறந்தபோதே சிவானி பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் சிவானி கயிறு அல்லது துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கணவர் யாஷ் தாக்குரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
