போதையில் மனைவியின் கை,கால்களை கட்டி… நள்ளிரவில் கணவன் செய்த காரியம்.. மூக்கிலிருந்து வந்த ரத்தம்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழகத்தில் நான்கு உடற்பயிற்சி நிலையங்களை நடத்தி வந்த தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உடற்பயிற்சி பயிற்சியாளர்களாக (Gym Trainers) பணியாற்றி வந்தனர்; கணவர் மாணவர்களுக்கும், மனைவி மாணவிகளுக்கும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு இரவு இருவரும் மது அருந்திய நிலையில் தனிமையில் இருந்துள்ளனர்.

அப்போது கணவன் தனது மனைவியின் கை, கால்களைக் கட்டி வைத்து உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக மனைவியின் மூக்கிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

பெண்ணின் கை, கால்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்கள் காணப்படுவதால், இது ஒரு கொலை என்ற கோணத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கணவனே திட்டமிட்டு தனது மகளைக் கொலை செய்திருப்பதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண்ணின் உடல்நிலை பாதிப்பு மது அருந்தியதால் ஏற்பட்டதா அல்லது சித்திரவதையினால் உயிரிழப்பு நேரிட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.