உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் அகிர்வார் என்பவருக்கும் தீஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுடைய இல்லற வாழ்க்கை சுமார் ஓராண்டுக்கு நன்றாக சென்ற நிலையில் அதன் பிறகு முகேஷ் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலமுறை இரவு நேரங்களில் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக மனைவி கேட்ட போது அவரை திட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இதே போல நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு திரும்பிய அவர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி அவருடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்துள்ளார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த முகேஷ் தன்னுடைய மனைவியை தூக்கிச் சென்று வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். உடனே அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தும் திட்டத்திற்கு ரஷ்யா கடும்…