சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார். அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘டீப்ஃபேக்’ மூலம் அவரது மனைவியின் முகம் மற்றும் குரல் அப்படியே போலி நபருக்குப் பொருத்தப்பட்டிருந்தது. இதை உண்மை என்று நம்பிய அந்த நபர், அந்தப் போலி நபர் கேட்ட தொகையை உடனடியாக அனுப்பியுள்ளார்.
அந்த 5 நிமிட வீடியோ கால் உரையாடலின் முடிவில், அந்த நபரிடமிருந்து சுமார் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சி மோசடியால் அவர் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சில நிமிடங்களில் இழக்க நேரிட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது கணவர் இவ்வளவு எளிதாக ஏமாந்து இத்தனை பெரிய தொகையை இழந்ததை மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு மற்றும் பண இழப்பு காரணமாக, அந்தச் சீன நபர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
