“15 வருட காதல்…. மனைவியையும் மாமியாரையும் ஒரே நேரத்தில்”…. கணவன் செய்த குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!

Spread the love

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சீதாநகரம் மண்டலம், பொபிலங்கா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீதாராமராஜு (36) மற்றும் லதா (31) தம்பதியர் காதலித்து திருமணம் செய்துகொண்டு 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில், சீதாராமராஜுவுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஊர் பஞ்சாயத்து மூலம் இருவரும் முறைப்படி பிரிந்தனர். அதன் பின்னர், சீதாராமராஜு அந்தப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.

பிரிந்த பிறகு, லதா தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக, லதாவின் தாய் வீடும் சீதாராமராஜுவின் வீடும் ஒரே தெருவில் அமைந்திருந்ததால், அவர்கள் அடிக்கடி நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. பிரிந்து சென்ற பின்பும், லதா தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பதை சீதாராமராஜுவால் ஜீரணிக்க முடியவில்லை. இது குறித்து தனது நண்பர்களிடம் அடிக்கடி ஆத்திரத்துடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லதா மீது தீராத பகை கொண்டிருந்த சீதாராமராஜு, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து லதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கு கத்தியால் லதாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதைக் கண்டு தடுக்க ஓடிவந்த லதாவின் தாய் கும்மடி லட்சுமி மீதும் கொடூரமாக அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாய் மற்றும் மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கொலையில் ஈடுபட்ட சீதாராமராஜுவை கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்து தப்பி ஓடிய அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்த இந்த கொடூர சம்பவம், அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

53 seconds ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

17 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

27 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

29 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

34 minutes ago