“நான் கூப்பிட்டா வரமாட்டியா”… உல்லாசத்திற்கு மறுத்த மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவர்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 7, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியை சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு சங்கப்பா (40) என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தன்னுடைய தாய் வீட்டில் மாரம்மா வசித்து வந்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக சங்கப்பா மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு அவர் தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால் ஆத்திரமடைந்த சங்கப்பா வீட்டிலிருந்த கோடாரியால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரம்மா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு மனைவி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கப்பா பயத்தில் அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற சரணடைந்தார்.

   

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்கரப்பா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.