தைவானைச் சேர்ந்த நபர் ஒருவருக்குத் தனது மனைவி வேறொரு ஆணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ள ‘ரோபோ வேக்கம் கிளீனர்’ சாதனத்தில் இருந்த கேமராவை மொபைல் செயலி மூலம் இயக்கி நோட்டமிட்டுள்ளார். அப்போது தனது மனைவி மற்றொரு நபருடன் நிர்வாணமாக இருந்ததை ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த ஆதாரத்தை வைத்துச் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கணவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்து, மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் இணைந்து NT$500,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.99 லட்சம்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தனது அனுமதியின்றி அந்தரங்கத்தைப் படம் பிடித்ததாக மனைவி அளித்த குற்றவியல் புகாரில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவன்-மனைவியாக இருந்தாலும் ஒருவரின் தனியுரிமையை மீற அனுமதி இல்லை எனக் கூறி, ரகசியமாக வீடியோ பதிவு செய்த கணவருக்கு 5 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்காதலை நிரூபித்து இழப்பீடு பெற்ற கணவர், அதே ஆதாரத்தைப் பதிவு செய்த விதத்தால் சிறை தண்டனை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…