“எம்பிஏ படிச்ச நீ ஏன் இதைச் செய்ற…?” தரையைத் துடைத்த மனைவியின் காலில் விழுந்த கணவன்…! மனதை உலுக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on வைகாசி 1, 2026

Spread the love

மும்பையில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வறுமையையும், கணவன்-மனைவி இடையிலான உன்னதமான அன்பையும் இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. மாதம் 35,000 ரூபாய் வருமானம் ஈட்டும் கணவனால், வாடகை, குழந்தைகளின் கல்விக்கட்டணம், குடும்பச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிய சூழலில், 7,000 ரூபாய் கடன் தவணையும் பெரும் சுமையாக இருந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியைத் தீர்க்க விரும்பிய மனைவி, யாரிடமும் சொல்லாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் துப்புரவுப் பணிகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற முன்வந்துள்ளார்.

மனைவி வேலைக்குச் செல்வது தெரியாத கணவன், ஒருநாள் உடல்நலக்குறைவால் சீக்கிரம் வீடு திரும்பியபோது உண்மை தெரிய வந்துள்ளது. பட்டதாரி பெண்ணான தனது மனைவி, தரையைத் துடைக்கும் வேலை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கோபப்படாமல் அவளது தியாகத்தை எண்ணிக் கண்ணீர் விட்டுள்ளார். “உயர் கல்வி கற்ற நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்?” என்று கேட்டு மனைவியின் கால்களில் விழுந்து அவர் கதறிய காட்சி, பொருளாதார நெருக்கடியிலும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கும் தம்பதிகளின் அன்பைப் பறைசாற்றுகிறது.