உத்தரபிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில், சாலையின் நடுவில் ஒரு நபர் தனது மனைவியை கொடூரமாக அடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை மசௌரா தடுப்புக்கு அருகிலுள்ள தானா சதார் கோட்வாலி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோவில், அந்த நபர் தனது மனைவியை தரையில் இழுத்துப்போட்டு அடிப்பதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அவர்களின் குழந்தையும் பக்கத்தில் உள்ளது. அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஜான்சியிலிருந்து சாகர் நகருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார்.
வழியில், ஏதோ ஒரு விஷயத்தில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் தனது மனைவியை அடிக்கத் தொடங்கினான். அப்போது அருகில் இருந்தவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு கணவன்-மனைவி இருவரையும் பிரித்து, அந்த நபரை கடுமையாக கண்டித்தனர். இதன் பின்னர், அந்த இளைஞன் தனது மனைவி மற்றும் குழந்தையை பைக்கில் ஏற்றிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…