புதுச்சேரி மாநிலம் முத்தியால்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன்(31). இவர் கடந்த 2022-ஆம் வருடம் கீர்த்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் கீர்த்திகா சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் தன்னுடைய தாய் மாமன் சதீஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பிறகு நானும் என்னுடைய கணவரும் உங்களோட வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் சதீஷ் வீட்டிற்கு செல்லாமல் ஏரிக்கரைக்கு சென்றுள்ளார்கள். பிறகு தாங்கள் இருவரும் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்கள் .
சிறிது நேரம் கழித்து சதீஷ் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள் நானும், என்னுடைய கணவரும் விஷம் குடித்து விட்டதாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்கள். பிறகு அவர்களை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். ஆனால் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். உயிரிழந்த கணவன் மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத இயக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…