என்னை கடித்தது எந்த பாம்புனு தெரியல…. 3 பாம்புகளையும் பையில் சுருட்டி வந்த வாலிபர்… மருத்துவமனையில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!

Spread the love

பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் குமார் என்பவர், ஒரு வீட்டில் புகுந்த மூன்று நாகப்பாம்புகளைப் பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக அவற்றில் ஒரு பாம்பு அவரது கையை கடித்தது. தம்மைக் கடித்தது எந்தப் பாம்பு என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், அவர் அந்த மூன்று பாம்புகளையும் ஒரே பையில் போட்டுக்கொண்டு சாசாராம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

மருத்துவமனைக்கு வந்த கவுதம் குமார், சிகிச்சையின் போது தமக்கு ஏற்பட்ட குழப்பத்தை விளக்கி, பையில் இருந்த 8 முதல் 10 அடி நீளமுள்ள மூன்று நாகப்பாம்புகளையும் மருத்துவர்களிடம் வெளியே எடுத்துக் காட்டினார். ஆக்ரோஷமாகச் சீறிய பாம்புகளைக் கண்ட மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த நோயாளிகள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் மருத்துவமனை வளாகமே போர்க்களம் போல காட்சியளித்ததுடன், சிறிது நேரம் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மூன்று நாகப்பாம்புகளையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர். அதன்பின்னர் கவுதம் குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர். பாம்பு கடித்தால் அந்தப் பாம்பை நேரில் கொண்டு வரத் தேவையில்லை என்றும், அதன் புகைப்படம் அல்லது அடையாளத்தைச் சொன்னாலே போதுமானது என்றும் அறிவுரை வழங்கிய மருத்துவர்கள், இது போன்ற செயல்கள் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

Nanthini

Recent Posts

கள்ளக்காதலியுடன் ரிசார்ட்டில் உல்லாசம்…. கதவை தட்டிய மனைவி.. உள்ளே இருந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…

5 minutes ago

“உனக்கு அழிவு ஆரம்பம்”… விஜய் டி-ஷர்ட்டை கொளுத்திய திமுக நிர்வாகி…. அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்… தீயாய் பரவும் வீடியோ….!

தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…

12 minutes ago

திடீர் திருப்பம்.. சரத்குமார் குறி வைக்கும் 3 தொகுதிகள்… அதிமுக மற்றும் தமாகா போடும் முட்டுக்கட்டை… அதிரும் அரசியல் களம்….!

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…

41 minutes ago

“60 சீட், ஆட்சியிலும் பங்கு”… சுக்குநூறாக உடையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி…. செல்லூர் ராஜு போட்ட அதிரடி ‘குண்டு’…!

தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…

47 minutes ago

BREAKING: பொங்கல் நாளில் விஜய்க்கு அதிர்ச்சி… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை  தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…

54 minutes ago

“18+1 அல்லது 8+1?”… துண்டு பேப்பரில் தேமுதிகவுக்கு திமுக கொடுத்த மெகா ஆஃபர்…. அரசியலில் புதிய திருப்பம்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக,…

1 மணத்தியாலம் ago