தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸ் கட்சி, வரும் தேர்தலில் தனக்கு 60 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், ஆட்சியில் உரிய பங்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸின் இந்தத் திடீர் நிபந்தனைகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது படங்களுக்கு எழுந்துள்ள தணிக்கை கெடுபிடிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருவதன் பின்னணியில் பெரிய அரசியல் கணக்கு இருப்பதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். தணிக்கை வாரிய விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம், திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் முயல்வதாகவும், இதன் மூலம் தனது 60 இடங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு கோரிக்கையை வலுப்படுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸின் இந்த நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை போன்ற விவகாரங்களில் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகச் சாடிய செல்லூர் ராஜு, தற்போது கூட்டணிக் கட்சிகளுடனான உறவிலும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆளுங்கட்சியினரின் தலையீடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற காரணங்களால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…