இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரும்பாலும் தற்போது மக்கள் செல்போன் மூலமாகவே UPI பயன்படுத்தி பணம் அனுப்பி விடுகிறார்கள். இதற்காக google pay, போன் பே, பே டி எம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறும் பயனர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் நோக்கத்திலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உங்களின் அக்கவுண்டில் இருந்து திடீரென்று சிறு தொகைகள் காணாமல் போகிறதா? அவை auto pay கட்டணங்களாக இருக்கலாம். எப்போதோ ஆக்டிவேட் செய்து, அதை கேன்சல் செய்யாததால் மாதம் மாதம் பிடிக்கப்படுகிறது. இதையெல்லாம் இனி நீங்கள் உங்கள் UPI செயலி மூலமாக கண்காணித்து மேனேஜ் செய்ய முடியும் என NPCI அறிவித்துள்ளது. இந்த வசதி வருகின்ற டிசம்பர் 31ம் தேதி முதல் உங்கள் செயலியில் வந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
