தொழில் தொடங்க ஆசையா?.. குறைந்த வட்டியில் ரூ.50,000 ஈஸியா கிடைக்கும்.. எப்படி பயன்பெறுவது..?

Spread the love

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசு செயல்படுத்தி வரும் முத்ரா யோஜனா கடன் திட்டம் சிறு தொழில் முனைவோர் மற்றும் சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த கடனுக்கு நீங்கள் எந்த அடமானமும் இல்லாமல் உடனடி கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளது. அதில் ஷிஷு பிரிவில் சிறு மற்றும் குறு வணிகங்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

பல்வேறு வங்கிகள் இந்த திட்டத்திற்கு கீழ் கடன் வழங்கும் நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை இந்த பிரிவில் கடன் பெறலாம். இதற்கு எந்த ஒரு உத்தரவாதம் மற்றும் திணை இல்லாமல் கடன் பெற்றுக் கொள்ள முடியும். சொந்த தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் பண பற்றாக்குறை இல்லாமல் இருக்க உதவுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த கடன் புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவு படுத்தவும் பெரும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில் குறைந்த வட்டியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை திருப்பி செலுத்தும் காலம் உள்ளது. உத்திரவாதம் அல்லது பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. செயலாக்கம் கட்டணமும் கிடையாது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

விண்ணப்பதாரர் சிறு தொழில் முனைவோராக இருப்பது அவசியம். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் எஸ்பிஐ சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வணிகம் விவசாயம் அல்லாத துறையுடன் தொடர்புடையதாக இருப்பது அவசியம்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற அடையாளச் சான்று, முகவரி சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வணிகம் தொடர்பான ஆவணங்கள் இருக்க வேண்டும்.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.onlinesbi.sbi என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Nanthini

Recent Posts

போதையில் மனைவியின் கை,கால்களை கட்டி… நள்ளிரவில் கணவன் செய்த காரியம்.. மூக்கிலிருந்து வந்த ரத்தம்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

தமிழகத்தில் நான்கு உடற்பயிற்சி நிலையங்களை நடத்தி வந்த தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர்…

9 minutes ago

தங்கம் வாங்கப் போறீங்களா..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! மோடி போட்ட மாஸ்டர் பிளானால்.. கவலையில் நகை வியாபாரிகள்! வைரலாகும் தகவல்…!!

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலத்திற்குத் தள்ளிப்போடுமாறு பிரதமர் நரேந்திர மோடி…

11 minutes ago

விஜய் முதல்வராவதற்கு உதவியாக இருந்த ‘டெல்லி’ டீம்..! ரகசியத்தை உடைத்த அபிஷேக் சிங்வி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு பாராட்டுகள் குவிந்தன…!

தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள சூழலில், கடந்த 10 நாட்களாக அவருக்குத் தேவையான சட்ட மற்றும் அரசியல் ஆலோசனைகளை…

11 minutes ago

வெடித்தது மோதல்..! ஸ்டாலினை தோற்கடிக்க எனக்கு அங்கீகாரம் கிடையாதா..? தவெக MLA வி.எஸ். பாபு அதிருப்தி..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்…

23 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… முதலமைச்சரை தோற்கடித்த வரலாறு!… ஆனால் இப்போது அங்கீகாரம் எங்கே?.. அதிருப்தியில் வி.எஸ்.பாபு… தவெக-வில் நடப்பது என்ன?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வி.எஸ்.…

23 minutes ago

“பெங்களூரு பங்களாவில் பயங்கரம்!… நாய்களைப் பராமரிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தொழிலதிபர் செய்த வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பின்னணி”…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து…

33 minutes ago