#image_title
ஒவ்வொரு வருடமும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. சாதி மத பேதம் என்று அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. தீபாவளி என்றாலே புத்தாடைகளும் இனிப்பு கார பலகாரங்களும் பட்டாசுகளும் தான். தீபாவளி நெருங்கிவிட்டது. என்னும் ஓரிரு தினங்களே தான் இருக்கிறது. அதனால் எல்லா பக்கமும் தீபாவளி கலை கட்ட ஆரம்பித்து விட்டது.
புத்தாடை பட்டாசு பலகாரங்கள் ஆகியவற்றையும் தாண்டி தீபாவளி அன்றைக்கு ஒரு முக்கியத்துவமான நிகழ்வு என்னவென்றால் அது எண்ணெய் தேய்த்து குளிப்பது. இதை கங்காஸ்நானம் என்றும் கூறுவார்கள். அதாவது தீபாவளி அன்று கடவுள் அசுரனை வதம் செய்து புதிய வாழ்க்கை நல்ல நேரம் ஏற்படுவதால் அன்றைய தினம் அனைவரும் தங்களது பாவங்களை போக்கும் படியாக எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து வணங்குவர். வடமாநிலங்களில் இந்த தீபாவளி அன்று அசுரவதம் சடங்கு விமர்சையாக நடைபெறும்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை மற்றும் நல்ல நேரம் என்ன அதைப் பற்றி இனி காண்போம். தீபாவளிக்கு முந்தனையே நாளே சுவாமிக்கு முன்பாக பூஜை அறையில் புத்தாடைகளை எடுத்து வைத்து விட வேண்டும். தீபாவளி அன்று காலை நேரத்திலேயே எழுந்து நல்லெண்ணெய் எடுத்து அதில் ஒரு சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சிய நல்லெண்ணெய் தான் அன்றைய தினம் பயன்படுத்த வேண்டும். சிறியாவர் முதல் வீட்டில் இருக்கும் அனைவரும் பெரியவர் வரை அன்றைய தினம் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அந்த நல்லெண்ணையை வீட்டில் பெரியவருக்கு எடுத்துக் கொடுத்து அவர் கையால் வீட்டில் உள்ளவர்களுக்கு உச்சி தலையில் முதலில் வைக்க சொல்ல வேண்டும்.
அதற்குப் பிறகு உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ஊற விட்டு குளிக்க வேண்டும். இப்படி குளித்து முடித்த பிறகு புத்தாடை அணிந்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இதை தான் தீபாவளி அன்று கங்காசனம் செய்து பூஜை முடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இதனால் நம் பாவங்கள் எல்லாம் விலகும் என்பது ஐதீகம். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நேரம் ஆக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் காலை 6:00 மணி முதல் 8:00 மணிக்குள் குளித்து விட்டால் மிகவும் நல்லதாக கூறப்படுகிறது. சூரியன் உச்சி வேலை நெருங்கும் வேலையில் குளிக்காமல் இருப்பது நல்லது. இதற்கு முன்பாகவே குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…