ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரின் மனைவி குஷ்பு குமாரிக்கு கடந்த ஜூலை 11ஆம் தேதி சதார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆரோக்கியமான குழந்தை பிறந்ததால் குடும்பம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு குஷ்புவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருடைய வயிற்றில் ஒரு காஷ் (டெட்ராகன்) துணி விடப்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.
இது உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தன. வறுமையில் வாழ்ந்த சஞ்சய் குமார் தங்கள் பண்ணை நிலத்தை விற்றும் கடன் வாங்கியும் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை முடிந்தாலும் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் குஷ்பூ இனி தாயாக முடியாது என்ற மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மருத்துவ அலட்சியம் காரணமாக வாழ்க்கையே சிறந்து விட்டதாக சஞ்சய் குமார் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
