ஐயோ… காதலி பேசாததால் விபரீதம்… வீட்டின் அருகே தூக்கில்… தொங்கிய மருத்துவமனை ஊழியர்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

காதலி பேச மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், திருவட்டாரை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் விஷ்ணுநந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவட்டார் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுநந்தன், இரவு நேரத்தில் தன் வீட்டின் அருகே உள்ள ஒரு பழைய வீட்டில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவத்தன்றும் வழக்கம்போல அவர் இரவு தூங்குவதற்காக அந்தப் பழைய வீட்டிற்குச் சென்றுள்ளார்.

   

அடுத்த நாள் காலையில் அவரது தாய் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டுத் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அறையில் விஷ்ணுநந்தன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுதார்.