தஞ்சை சேர்ந்த அறிவழகன் (37), மனைவி உஷா (35), மூத்த மகள் ரூபா (10), இளைய மகள் பவ்யா ஸ்ரீ (9),தங்கை மகள் தேஜாஸ்ரீ. இவர் ஐவரும் ஒரே பைக்கில் பனங்காட்டுப் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில், நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த அறிவழகன் பைக் மீது மோதியது.
பைக்கில் இருந்த ஐவரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜாஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உஷா, ரூபா ஆகியோர் படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர், காயமடைந்த உஷா மற்றும் ரூபாவை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இறந்த மூவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…